Home இலங்கை அரசியல் இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்: அமித் ஷாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும்: அமித் ஷாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று இந்திய மத்திய
அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கையளிக்கப்பட்டுள்ளது.

மனு கையளிப்பு

மதுரை ஆதீனம் இந்த கோரிக்கை மனுவை, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
விடம் நேற்று கையளித்துள்ளது.

அத்துடன் இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வு
என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அம்மன் கோவிலில் தரிசனம்

மதுரை ஒத்தக்கடையில், பாரதீய ஜனதாக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில்
பங்கேற்ற அமைச்சர், முன்னதாக நேற்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம்
செய்தார்.

இதன்போதே இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version