Home இலங்கை சமூகம் இலங்கை வரவுள்ள ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

இலங்கை வரவுள்ள ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

0

இலங்கை வரவுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஜெய்சங்கர், நாளை (04.10.2024) இலங்கை வரவுள்ள நிலையில், ஜெய்சங்கரிடம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் 4 கோரிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

அவை வருமாறு,

1. 1974ஆம் ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆவது சரத்தின் பிரகாரம்
பாரம்பரியமாக கடற்றொழிலில் ஈடுபடும் உரிமையை உறுதி செய்யதல்.

2. இலங்கை சிறையில் உள்ள 125இற்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களையும்
கைப்பற்றப்பட்டுள்ள 190இற்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளை
உடனடியாக மீட்டுத்தர வேண்டும்.

3. இந்திய நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு தமிழக கடற்கரையில் நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் படகுகளை மீண்டும் அவர்களிடம்
ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 10இற்கும் மேற்ப்பட்ட இந்திய
கடற்றொழில் படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்திய
தமிழ்நாடு தேசிய பாரம்பரிய கடற்றொழிலாளர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய கடற்றொழிலாளர் ஒருவர் தெரிவிக்கையில்,

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

Source: https://tamilwin.com/article/requests-from-tamil-nadu-fishermen-to-jaishankar-1727951617

NO COMMENTS

Exit mobile version