Home இலங்கை அரசியல் சற்று முன்னர் பதவி விலகினார் தென்மாகாண ஆளுநர்..!

சற்று முன்னர் பதவி விலகினார் தென்மாகாண ஆளுநர்..!

0

தென் மாகாண ஆளுநரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன சற்று முன்னர் பதவி விலகியுள்ளார்.  

தற்போதைக்கு நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தைப் பிடித்து தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார்.

ரணிலின் நியமனங்கள் 

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி அதிகாரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் பதவிக்காலமும் நிறைவுக்கு வரும்.

அந்தவகையில், ரணில் நியமித்த ஆளுநர்களில் தென்மாகாண ஆளுநர், லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன முதலாவதாக தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், அது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை அவர், விலகவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version