Home இலங்கை கல்வி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு (Ministry of Education) தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் அவர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவு சிக்கல்களை நீக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை உபகுழுவிடம் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி: வெளியாகியுள்ள தகவல்

கல்வி சாரா ஊழியர்கள்

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இப்பிரச்சினைக்கு தீர்வுகான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக அரச பல்கலைக்கழக அமைப்பில் பாரிய தொழில்சார் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவு சிககல்களை நீக்குவது தொடர்பான இரண்டு அமைச்சரவைப் பத்திரங்கள் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி அமைச்சரவை உபகுழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ரணிலின் திடீர் முடிவால் குழப்பத்தில் அமைச்சர்கள்

தமிழ் அரசியல்வாதி ஒருவரின் மோசமான செயல்! பௌத்த தேரரால் அம்பலமான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version