Home இலங்கை அரசியல் அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

அநுரவின் ஆட்சியில் காத்திருக்கும் அதிரடிகள் : பீதியில் ஊழல் அரசியல்வாதிகள்

0

சட்டவிரோதமாகவும் மற்றும் முறைக்கேடாகவும் மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்கள் அனைவரும் வெகு கூடிய சீக்கிரத்தில் வெளிச்சத்திற்கு வருவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் யாழ் (Jaffna) மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் (Chandrasekaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) தண்ணீர் காட்டுவதாக சில சூழ்ச்சிக்காரர்கள் சவால் விட்டுகொண்டு இருக்கின்றனர்.

நடைபெற்ற ஊழல்

நாட்டில் நடைபெற்ற ஊழல் அணைத்தும் வெளிச்சத்திற்கு வரும் போது கோடிக்கணக்கில் இலாபம் ஈட்டியவர்களின் பட்டியல் வெளியிடப்படும் அப்போது மக்களுக்கு தெளிவு கிடைக்கும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த நகர்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதையடுத்து எமது கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், அநுரவின் ஆட்சியின் அடுத்தக்கட்டம், அநுரவின் ஆட்சியில் மக்களுக்காக முன்னடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பிலும் சந்திரசேகரன் தெரிவித்த கருத்துக்களை காண கீழுள்ள காணொளியை பார்வையிடவும்,

https://www.youtube.com/embed/sHkpmV-XyUk

NO COMMENTS

Exit mobile version