Home இலங்கை அரசியல் சிறுபான்மையினருக்காக சஜித்: ரிஷாட் புகழாரம்

சிறுபான்மையினருக்காக சஜித்: ரிஷாட் புகழாரம்

0

சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்க கூடிய ஆளுமை உள்ளவராக சஜித்பிரேமதாச மாத்திரமே இருப்பதாக முன்னாள் அமைச்சரும், வன்னிமாவட்ட வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள்

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு செய்தியை கூறியிருக்கின்றது.

அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார 42 வீதமான வாக்குகளை பெற்றிருந்தார். அந்தவகையில் 58 வீதமான வாக்குகள் அவருக்கு எதிராக இருந்தது.

ஜனாதிபதித் தேர்தலின் பிறகு உடனடியாக ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் வாக்குகள் அதிகரிப்பதுவே வழமை.

ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் நாட்டுமக்களுக்கு கூறியிருக்கின்றது.

அந்த தேர்தல் முடிவுகளின் படி தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் ஆட்சி செய்யமுடியாது என்ற செய்தியும் கூறியிருக்கின்றது.

சிறுபான்மை மக்கள்

ஒவ்வொரு நாளும் வாக்குகள் குறைவடைந்துகொண்டே செல்கின்றது. எனவே தமிழ் பேசுகின்ற மக்கள் ஆழமாக சிந்தித்து இந்ததேர்தலில் தங்களது பிரதேசங்களுக்காக பணியாற்றக்கூடிய நல்லவர்களுக்கு சந்தர்பத்தை வழங்கவேண்டும். 

சிறுபான்மை சமூகங்கள் தலைமைகளை இழந்துவிட்டால் நம்மை அடக்கி துன்பப்படுத்தும் போது அதற்கு எதிராக பேசுவதற்கு தலைமைகள் இல்லாத நிலையே ஏற்படும்.

எனவே சிறுபான்மை மக்களுக்காக பேசக்கூடிய அல்லது தீர்வை பெற்றுக்கொள்ளும் ஆளுமை உள்ள தலைவராக சஜித்பிரேமதாசவையே பார்க்கின்றோம்.

ஏனைய எதிர்கட்சிகளையும் இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்க கூடிய வாய்ப்பு எமக்கு இருக்கிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version