2022ல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் காந்தாரா. அந்த படத்தை இயக்கி நடித்து இருந்தவர் ரிஷப் ஷெட்டி.
அந்த படத்திற்காக அவர் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றார். பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை குவித்த காந்தாரா 400 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது.
காந்தாரா 2 சம்பளம்
தற்போது காந்தாரா 2 படத்திற்காக ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை 2400% உயர்த்திவிட்டார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
100 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக தரப்படுகிறதாம். அது மட்டுமின்றி லாபத்திலும் அவருக்கு பங்கு என அக்ரிமென்ட் போடப்பட்டு இருக்கிறதாம். அதில் குறைந்தபட்சம் அவருக்கு 50 கோடி வரை தனியாக கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/rishab-shetty-huge-salary-for-kantara-2-1752057268
