Home இலங்கை சமூகம் செம்மணியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

செம்மணியில் மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

0

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12ஆவது நாள் அகழ்வுப் பணிகள்
இன்றையதினம்(06) முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன்
47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

சான்றுப் பொருட்கள் அடையாளம் 

குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன்
மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் நேற்றுமுன்தினம் தொடக்கம் அகழ்வுப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அந்த இடத்திலும் சான்றுப் பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில்
இன்றையதினம் ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது
அதிலும் எலும்புகள் காண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர்
ராஜ்சோமதேவா குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version