Home இலங்கை சமூகம் யாழ்.தனியார் பேருந்து சாரதிகளின் பொறுப்பற்ற செயல்: காவல்துறை பாராமுகம்

யாழ்.தனியார் பேருந்து சாரதிகளின் பொறுப்பற்ற செயல்: காவல்துறை பாராமுகம்

0

யாழ். (Jaffna) பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர
சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் நீண்ட நேரமாக நிறுத்தப்படுவதால்
அப்பகுதியில் தொடர்ச்சியாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மின்சார நிலைய வீதியிலிருந்து பயணிகளை ஏற்றி சேவையை ஆரம்பிக்கும் குறித்த
தனியார் பேருந்துகள் ஆமை வேகத்தில் ஊர்ந்து மேலும் அதிகளவானவர்களை ஏற்றுவதற்கு
நேரத்தினை நகர்த்துவதற்காக வைத்தியசாலை வீதியில் பிரதான பேருந்து நிலையத்தின்
முன்பாக நீண்ட நேரம் நடுவீதியில் நிறுத்தப்படுகின்றது என மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையம், முச்சக்கரவண்டி தரிப்பிடம் காணப்படுகின்ற நகரின் மத்திய
பகுதியில் இவ்வாறு பொறுப்பின்றி சரதிகள் நடந்து கொள்ளவதால் ஒரு வழிப்பாதையான
இப்பாதையில் பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாது காத்திருந்தே
பயணிக்க வேண்டியுள்ளது.

குறித்த இடத்தின் மிக அருகிலேயே காவல்துறை பரிசோதனை சாவடி காணப்படுகின்ற போதும்
காவல்துறையினரும்
எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

NO COMMENTS

Exit mobile version