Home இலங்கை அரசியல் மகிந்தவுக்கு ரம்புட்டானை பரிசளித்த மொட்டு எம்.பி

மகிந்தவுக்கு ரம்புட்டானை பரிசளித்த மொட்டு எம்.பி

0

களுத்துறை (Kalutara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது இன்றைய தினம் (14.07.2025) கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் 

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபயகுணவர்தன ரம்புட்டான் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், முன்னாள் உள்ளூராட்சி பிரதிநிதிகள் மற்றும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களும் இதன்போது கலந்துக்கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version