கோவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு வழங்குமாறு சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (17) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கோட்டாபய அரசாங்கம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கோவிட் வைரஸ் பரவல் காலத்தில் ஒரு இனத்தையும் மதத்தையும் இலக்கு வைத்து கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் நடந்து கொண்டது.
கோட்டாபய ராஜபக்க்ஷ அரசாங்கம் உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதல்களையும் மீறி செயற்பட்டது.
இந்நிலையில், உரிமைகள் மீறப்பட்ட இஸ்லாமிய சமூகத்தினருக்கும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
