மக்கள் தமது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தம்மிடம் வரும்போது, தாம் ஜனாதிபதி
சஜித் பிரேமதாசவா? என தனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சி
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அனுராதப்புரத்தில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
மக்கள்
தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு அரசாங்கத்திற்கு ஆணையை
வழங்கியிருக்கிறார்கள்.
நடப்பு அரசாங்கத்தின் கொள்கை
எனினும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன் தம்மிடம் ஏன் வருகிறார்கள்
என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிd;றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தாம் என்ன ஜனாதிபதி சஜித் பிரேமதாசவா என்று தமக்கே ஆச்சரியமாக
இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வின்போது அவர் நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகளை கடுமையாக
விமர்சித்துள்ளார்.