Home இலங்கை அரசியல் எதிர்க்கட்சியை வலுப்படுத்தல் தொடர்பில் சஜித் தலைமையில் கலந்துரையாடல்

எதிர்க்கட்சியை வலுப்படுத்தல் தொடர்பில் சஜித் தலைமையில் கலந்துரையாடல்

0

நாடாளுமன்ற எதிர்க்கட்சியை வலுப்படுத்தல் தொடர்பான முக்கியமான கலந்துரையாடல் ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(29) காலை நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

சந்திப்பில் கலந்துகொண்டோர்

இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், அனுராத ஜயரத்ன, சாணக்கியன், ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version