Home இலங்கை அரசியல் வாய்ப்பு மறுக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளை சந்திக்கும் சஜித்

வாய்ப்பு மறுக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சிகளை சந்திக்கும் சஜித்

0

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றக் குழுக்களில் வாய்ப்புகள்
வழங்கப்படாதது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தலைமையில் ஒரு
கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

தகவல்படி, இந்த கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது.

கலந்துரையாடல்

இது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் தொடர்புடைய பிரச்சினை என்பதால், அனைத்து
எதிர்க்கட்சிகளும் இந்த கலந்துரையாடலில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற
கலந்துரையாடலிலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version