Home இலங்கை அரசியல் ரணிலுடன் கைகோர்த்து அரசியல் செய்ய சஜித்துக்கு அழைப்பு

ரணிலுடன் கைகோர்த்து அரசியல் செய்ய சஜித்துக்கு அழைப்பு

0

எதிர்க்கட்சி தலைவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(04.09.2024) சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்த அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

“இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள்.

அரச அதிகாரிகளின் மூளைகள் முற்றாகக் கழுவப்பட்டுள்ளன.

பொய் வாக்குறுதி

அரச ஊழியர்களிடம் பொய் வாக்குறுதிகளை நிரப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கிலும் அவ்வாறானதொரு நிலைமைதான்.

இப்போது இலக்கு இளைஞர்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான். என்றார்.

NO COMMENTS

Exit mobile version