திருகோணமலை- முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி
உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அசாதாரண நிலமையை எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த விஜயத்தினை அவர் இன்றையதினம்(16) மேற்கொண்டுள்ளார்.
அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களோடு அவர் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
காணி அபகரிப்பு
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் திடீர்
களவிஜயம் மேற்கொண்ட எதிர் கட்சி தலைவர் காணி அபகரிப்பு தொடர்பிலும்
விவசாயிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் கிண்ணியா மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர்கள் உட்பட பலரும்
கலந்து கொண்டனர்.
