Home இலங்கை அரசியல் அரச ஊழியர்களை வைத்து காய் நகர்த்தியுள்ள ரணில்: அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

அரச ஊழியர்களை வைத்து காய் நகர்த்தியுள்ள ரணில்: அம்பலப்படுத்திய பிரதமர் ஹரிணி

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் காலத்தில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

கொழும்பு (Colombo) – பாதுக்கவில் நேற்று (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானம் 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், “தற்போது அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை பார்க்கும் போது திறைசேரி அல்லது நிதியமைச்சின் அதிகாரிகளின் அனுமதியின்றி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொய்யான வாக்குறுதி

முடிவை அறிவித்து விட்டார் எனினும், ஆனால் முடிவை செயல்படுத்தும் பகுதியை செய்துவிட்டு முடிவு எடுக்கப்படவில்லை.

இதற்கு என்ன அர்த்தம்? இது மக்களை தவறாக வழிநடத்தும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட பொய்யான வாக்குறுதியாகும்.” என்றார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனவரியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு புதிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version