போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர், தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய புள்ளி என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பத் மனம்பேரியின் வழக்கறிஞர், தற்போதைய அமைச்சரவை அமைச்சர் எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் வலிமையான நபர்
அத்துடன், அவர் அரசாங்கத்தின் வலிமையான நபர்களில் ஒருவர் எனவும் டி.வி.சானக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் வழக்கு அறிக்கையுடன் விரைவில் வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
