Home இலங்கை சமூகம் ஆபத்தான நிலையில் சங்கு பிட்டி பாலம்! அரச நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

ஆபத்தான நிலையில் சங்கு பிட்டி பாலம்! அரச நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

0

மன்னார்(Mannar) – யாழ்பாண பிரதான வீதியில் அமைந்துள்ள சங்கு பிட்டி பாலமானது அபாயகரமான
நிலையில் காணப்படுகின்ற நிலையில் இது தொடர்பில் காத்திரமான பாதுகாப்பு
நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பாலத்தின் ஆரம்ப பகுதியில் சிறுபகுதி தாழ் இறங்கியுள்ளதுடன்
பாலத்தின் கீழ் பகுதி கடுமையாக கரல் ஏறி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளின் கோரிக்கை

இந்த நிலையில், தொடர்சியாக வாகனங்களின் போக்குவரத்து இடம்பெற்று வருகின்ற போது
பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை என அவ்வீதியூடான பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், தாழ் இறங்கிய பகுதியில் மாத்திரம் பயணம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்
மக்களும் தொடர்சியாக அபாயமான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் திணைக்களங்கள் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட
முன்னதாக பாலத்தின் திருத்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதுடன் அதுவரை
அந்த பகுதியில் பயணிக்கின்ற வாகனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/sangu-pitti-bridge-anura-goverment-1729267706

NO COMMENTS

Exit mobile version