Home இலங்கை அரசியல் சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சமில்லை: வியாழேந்திரன் எம்.பி

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சமில்லை: வியாழேந்திரன் எம்.பி

0

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொண்டதுமில்லை
அச்சம்கொள்ளப்போவதுமில்லையென வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்
தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப்பெற்றுக்கொடுக்கும்
நடமாடும் சேவையொன்று இன்று(16) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

காணி உறுதி வழங்கும் வேலைத்திட்டம்

ஜனாதிபதியின் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்
நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் உறுமய திட்டத்தின் கீழ் காணி
உறுதிப்பத்திரம் வழங்கும் செயற்பாட்டினை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
விடுத்துள்ளாதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளில்
நீண்டகாலமாக வசித்துவரும் குடும்பங்கள் பல ஆண்டுகளாக உறுதிகள் அற்ற நிலையிலேயே
வாழ்ந்துவருகின்றன.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு
கொண்டுசென்றதையடுத்து இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த நடமாடும் சேவை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ்
தலைமையில் நடாத்தப்பட்டதுடன் இதில் இராஜாங்க அமைச்சர்
சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version