Home முக்கியச் செய்திகள் இன்று நாரஹேன்பிட்டியில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை

இன்று நாரஹேன்பிட்டியில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை

0

தேங்காய்களைக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் நடமாடும் சேவை குறித்து தெங்கு அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று (28) நாரஹேன்பிட்டி (narahenpita) தொழிலாளர் அலுவலக வளாகத்தில் தேங்காய் விற்பனை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை காலை 9.00 மணி முதல் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காய் ஒன்றின் விலை

இதன்போது பெரிய தேங்காய் ஒன்றை 120 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு 5 தேங்காய்களும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியோர்களுக்கு 10 தேங்காய்களும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், தெஹிவளை (Dehiwala) நகரில் நாளை (29) நடமாடும் தேங்காய் விற்பனை முன்னெடுக்கப்படும் எனத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version