Home முக்கியச் செய்திகள் எதிர்க்கட்சித் தலைவரின் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல்

எதிர்க்கட்சித் தலைவரின் நாடாளுமன்ற செயலாளர் பதவி விலகல்

0

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளராக கடமையாற்றிய சட்டத்தரணி திசத் தேவப்பிரிய பண்டார விஜயகுணவர்தன (Thisath Devapriya Bandara Wijayagunawardena) பதவி விலகல் கடிதத்தை சமர்பித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்வதற்கு பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹிருணிகாவின் பதவி விலகல்

இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) அறிவித்திருந்தார்.

அத்தோடு, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட மன விரக்தியே தான் பதவி விலக காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version