Home முக்கியச் செய்திகள் மசாஜ் செய்யும் போது போதைப்பொருள் விற்பனை : சிக்கினார் பெண்

மசாஜ் செய்யும் போது போதைப்பொருள் விற்பனை : சிக்கினார் பெண்

0

 ஹபரணையின் ஜெயசெங்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் மைய உரிமையாளரான பெண் நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் இன்று(17) மாலை கைது செய்யப்பட்டதாக ஹபரணை காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறை நாய்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட பெண் நான்கு கிராம் நூறு மில்லிகிராம் ஐஸ் வைத்திருந்ததாக ஹபரணை காவல் நிலையப் பொறுப்பதிகாரி டி.ஜே. மதுசங்க திசாநாயக்க தெரிவித்தார்.

விசாரணைகளை நடத்தி வரும் காவல்துறையினர்

விசாரணைகளை நடத்தி வரும் ஹபரணை காவல்துறையினர், சந்தேக நபர் லிஹினியமுல்ல, உடவல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளில் வசிக்கும் ஐம்பத்தாறு வயதுடையவர் என்றும் தெரிவித்தனர்.

இந்தப் பெண் ஹபரணை-திருகோணமலை பிரதான சாலையில் உள்ள ஜெயசென் கிராமத்தில் மசாஜ் நிலையம் நடத்தி வருவதாகவும், நீண்ட காலமாக வாடிக்கையாளர்களுக்கு ஐஸ் விற்பனை செய்து வருவதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version