தமக்கு உயிராபத்து எதுவும் ஏற்படும் என்றால் அதற்கு செல்வம் அடைக்கலநாதன் தான் பொறுப்பு என ரெலோவின் ஒரு உறுப்பினரான சுரேஸ் தமக்கு தொலைபேசியில் கூறியதாக ரெலோ அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, தன்னுடைய குடும்பத்தை பிரித்ததும் செல்வம் அடைக்கலநாதன் தான் என சுரேஸ் குறிப்பிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தை ஆதாரப்படுத்த வேண்டும் என்றால் குற்றப்புலனாய்வுப் பிரிவு தமது தொலைபேசியை பரிசோதனை செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஏன் அடைக்கலநாதன் குற்றப்புலனாய்வு பிரிவில் முறையிடாமல் நாடாளுமன்றத்தில் பொய் கூறுகின்றார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
