வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வாகனம் திடீர் தீப்பரவலுக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் வவுனியா, பட்டானிச்சி புளியங்குளம் பகுதியில் நேற்று முன் தினம் (02) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகனத்தில் மின்சார
சீரின்மை காரணமாக தீப் பரம்பல் ஏற்பட்டுள்ளது.
தீப் பரம்பல்
இதனையடுத்து வாகன சாரதியும் மற்றும் அப்பகுதியில் நின்றவர்களும் துரிதமாக செயற்பட்டு
தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இச்சம்பவத்தின் போது வாகனத்தில் செல்வம் அடைக்கலநாதன்
பயணிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
