Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதற்கே வெட்கப்படும் வைத்தியர்கள்

0

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் கடமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஏற்றுகொள்ள கூடியது என வைத்தியர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் விடயங்கள் வைத்தியர்களுக்கு வெளியில் செல்வதற்கே வெட்கமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியர்களின் நடவடிக்கை

அத்தோடு, வைத்தியர்கள் நோயாளிகளுக்கு சரியான அறிவுருத்தல்கள் வழங்குவதில்லை மற்றும் அவர்களிடம் அன்பாக பழகுவதில்லை என முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை  

இவ்வாறு பல வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது இந்த சந்தர்ப்பத்தில் தங்களை எதிர்க்கின்றனர் எனவே இனியாவது வைத்தியர்கள் திருந்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/eHQxxPGZ9Fo?start=24

Source: https://ibctamil.com/article/senthuran-information-about-savagacherry-hospital-1721193703?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version