Home சினிமா சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா தொடங்கிய புதிய தொழில்- சபாஷ், புதிய முயற்சி

சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா தொடங்கிய புதிய தொழில்- சபாஷ், புதிய முயற்சி

0

சுந்தரி சீரியல்

தமிழ் மொழி நன்றாக பேசும் நடிகைகள் சின்னத்திரை மற்றும் வெள்ளத்திரையில் காண்பது அரிது.

பெரும்பாலும் வெளிமாநிலத்து நடிகைகள் தான் நடிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் பல நடிகைகள் பல்வேறு திறமைகளோடு இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில நடிகைகள் இப்போது சினிமாவில் ஜொலிக்கிறார்கள்.

அப்படி நன்கு தமிழ் பேசக்கூடிய, கருப்பு நிறம் கொண்ட ஒரு பெண்ணாக சினிமாவில் நுழைந்து இப்போது நாயகியாக கலக்கி வருபவர் கேப்ரியல்லா.

சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல்களில் ஒன்றான சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

புதிய தொழில்

நடிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியே வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு இன்று தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் கேப்ரியல்லா.

தற்போது இவர் சொந்தமாக ஒரு நடிப்பு பள்ளி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதற்கு கேபி சினிமா ஃபேக்டரி தியேட்டர் என்ற பெயர் வைத்திருக்கிறார்.

20 பேருக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக களமிறங்கியுள்ளார், வீடியோவையும் மே 1ல் வெளியிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version