பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தமையால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளதாக சாணக்கியன் கேலி செய்யும் வகையில் கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில்,கருணாவின் பேச்சுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம் என பலர் என்னிடம் கூறினார்கள்.
ஆனால் இதை சொல்லியாக வேண்டும், கருணா இங்கிருந்துகொண்டு பிரித்தானியாவை ‘மொக்க அரசாங்கம்’ என்று கூறியுள்ளார்.
இதனால் பிரித்தானிய மகாராணி கவலையடைந்துள்ளாராம்.
உங்களுக்கே தெரியும் யார் மொக்கை என்று என கூறியுள்ளார்.”
