Home இலங்கை அரசியல் இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது : குகதாசன் சுட்டிக்காட்டு

இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது : குகதாசன் சுட்டிக்காட்டு

0

தற்போதைய இளைஞர்களுக்கு ஜே.வி.பியை பற்றி ஒன்றும் தெரியாது என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட முதன்மை வேட்பாளரான சண்முகம் குகதாசன் (Shanmugam Kugadasan) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை மூதூர் சம்பூரில் (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னிடம் சில இளைஞர்கள் ஏன் ஜே.வி.பிற்கு நான் வாக்களிக்க வேண்டாம் என கூறினேன் என்று கேள்வியெழுப்புகின்றனர்.

தற்போதைய இளைஞர்கள்

அவர்களிடம் வடக்கு மற்றும் கிழக்கு முன்பு எப்படி இருந்தது என நான் கேள்வியெழுப்பினால் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. 

அத்தோடு, வடக்கு மற்றும் கிழக்கு முன்பு ஒன்றாக இருந்த போது அதை பிரித்தது இந்த கட்சிதான் என நான் கூற வேண்டி இருந்தது.

விடுதலைப் புலி

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் போர் ஏற்படும் நேரத்தில் அரசாங்கதிற்கு படைகள் இல்லாத நேரத்தில் ஜே.வி.பி கட்சிதான் 60000 பேரை திரட்டி கொடுத்தது என நான் கூறினேன்.

எனவே, இப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பதாக இருந்தால் நீங்கள் அளிக்கலாம் என தெரிவித்த போது எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என தெரிவிக்கின்றனர்.

ஆகவே, ஊடகங்கள் வாயிலாக குறித்த கட்சி தொடர்பாக பரப்புரைகளை நாம் செய்ய வேண்டும் அத்தோடு வீட்டுக்கு வாக்களிக்கச் செய்வதன் மூலமே தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை
இம்முறை பாதுகாக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version