Home இலங்கை சமூகம் சற்றுமுன் பதிவான துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் அதிரடி கைது

சற்றுமுன் பதிவான துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் அதிரடி கைது

0

மீடியாகொட, ஹிக்கடுவ, மலவென்ன பகுதியில்  துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

வானில் வந்த ஐந்து பேரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பி சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் T-56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றைய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்காண்டுள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version