Home இலங்கை குற்றம் யாாழில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட கடை உரிமையாளர்

யாாழில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட கடை உரிமையாளர்

0

யாழ்ப்பாணம் (Jaffna) அச்சுவேலியில் இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை
உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இன்று(10) அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத்
திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனத்தெரியாத கும்பல் ஒன்றே கடை உரிமையாளர்
மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி
மறைத்திருத்ததாக தெரியவருகிறது.

தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை
நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (54) வயதுடையவரே இவ்வாறு பலத்த
காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version