Home முக்கியச் செய்திகள் தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறு எழுப்பப்படும் குரல்

தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறு எழுப்பப்படும் குரல்

0

தெகிவளை மிருகக்காட்சி சாலையை மூடுமாறும் விலங்குகளை முறையாக கவனிக்குமாறும் வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பல்வேறுபட்ட தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இலங்கையில் (Sri Lanka) மக்கள் அதிகமாக வந்து பார்வையிட்டு மகிழும் மிருகக்காட்சி சாலைகளில் தெகிவளை மிருகக்காட்சி சாலை முதன்மையாக காணப்படுகின்றது.

எனினும், பல ஆண்டுகளாக, இங்குள்ள விலங்குகள் போதுமான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் வாழ்கின்றன.

மிருகங்களின் நிலைமை

இதன்காரணமாக, கால்நடைகள் ஆரோக்கியம் குன்றி காணப்படுவதாகவும் மற்றும் அவதிப்படுவதாகவும் பல்வேறுபட்ட தரப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். 

எனவே, இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவருவதால் மிருகக்காட்சி சாலையை மூடுமாறு பலரும் குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version