Home சினிமா தன்னை பற்றி யோசிக்காததால் ரோஹினி எடுத்த முடிவு, பதறிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை புரொமோ

தன்னை பற்றி யோசிக்காததால் ரோஹினி எடுத்த முடிவு, பதறிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை புரொமோ

0

சிறகடிக்க ஆசை

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோடில், சீதா காதலரான அருணை, முத்து சந்தித்தவுடன் செம கோபம் அடைகிறார்.

கோவிலில் எதுவும் பேசாமல் அப்படியே சீதா வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் நடந்த விஷயங்களை கூறுகிறார். அவரது அம்மா முத்து சொன்னதை கேட்டு சீதா வந்தவுடன் அவரை அடிக்கிறார்.

தனது மாப்பிள்ளை பிடிக்காத எந்த விஷயமும் நடக்காத என சீதாவிடம் அவரது அம்மா கோபமாக கூறுகிறார். பின் மீனா, சீதாவை சமாதானம் செய்து நான் பேசி புரிய வைக்கிறேன் என கூறுகிறார்.

புரொமோ

பின் நாளைய எபிசோடின் புரொமோவில், மனோஜ், ரோஹினி காட்சிகள் இடம்பெறுகிறது.

மனோஜ் நண்பர் ஒரு கதை கூறுகிறார், அவரது நண்பர் குடும்பத்தில் பிரச்சனையால் கணவன்-மனைவி இருவரும் பேசாமல் இருந்தனர். இதனால் கோபமான அவனது மனைவி வேறொரு வாழ்க்கையை ரெடி செய்துவிட்டார் என்கிறார்.

வீட்டிற்கு வந்த மனோஜிடம், நீ இதே போல் உன் அம்மாவிற்கே சப்போர்ட் செய்து வந்தால் நான் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுப்பேன் என கூறு மனோஜ் ஷாக் ஆகிறார். 

NO COMMENTS

Exit mobile version