Home சினிமா சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா, குடும்பத்தின் நிலை.. ஷாக்கிங் எபிசோட்

சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா, குடும்பத்தின் நிலை.. ஷாக்கிங் எபிசோட்

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், அண்ணாமலை குடும்பத்தை பிரிக்க ஸ்ருதியின் அம்மா ரோஹினியை வைத்து காய் நகர்ந்த ஆரம்பித்துள்ளார்.

கடைக்கு மிக்ஸி வாங்குவது போல் வந்து ரோஹினியை, ரவி ரெஸ்டாரன்ட் சென்று அங்கு அவர் எப்படி அந்த பெண்ணுடன் பழகுகிறார் என பார்க்க கூறினார்.

இன்று ரோஹினி, ரவி ரெஸ்டாரன்ட் சென்று நீதுவிடமும் பேசுகிறார், பின் ஸ்ருதி அம்மாவிற்கு போன் செய்து இல்லாதது பொல்லாதது எல்லாம் சேர்த்து கூறுகிறார். இதனால் கண்டிப்பாக ஸ்ருதி அம்மா ஏதாவது பிரச்சனை செய்வார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

இன்னொரு பக்கம் சீதா வீட்டில் நடந்ததை எல்லாம் கூறி மீனா முத்துவிடம் எமோஷ்னலாகிறார்.

அடுத்த கதைக்களம்

அடுத்த எபிசோட் என்ன நடக்கப்போகிறது என்ற புரொமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ரோஹினியின் அம்மா நடுரோட்டில் ஒரு பைக் காரன் அடித்துவிட்டு சென்றதால் மயங்கி விழுந்துகிடக்கிறார்.

அவரை பார்த்த முத்து மருத்துவமனையில் அழைத்து செல்ல தூக்க அங்கிருந்த ஒருவர் அவர் உயிருடன் இருக்கிறாரோ இல்லையோ என கூறுகிறார்.

எனவே அடுத்து ரோஹினியின் அம்மா இறப்பு கதைக்களம், க்ரிஷ் நிலைமை என அடுத்தடுத்து பரபரப்பு எபிசோட் வரும் என கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-next-shocking-storyline-1752809710

NO COMMENTS

Exit mobile version