Home சினிமா விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு...

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம்

0

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் முடிந்தது.

வீட்டில் மீனாவை மரியாதை இல்லாமல் விஜயா நடத்துவதை தட்டிக் கேட்கிறார் முத்து.

பின் கடையில் ரோஹினி-மனோஜ் காட்சிகள் எப்போதும் போல தான் நடக்கிறது, விஜயாவை நினைத்து மனோஜ் பயப்படுவது பற்றி தான் ரோஹினி பேசி புலம்புகிறார்.

இன்னொரு பக்கம், முத்து சவாரி வருகிறது, அவர் அவர்களை கூட்டிக்கொண்டு மீனா கடைக்கு செல்கிறார். அங்கு இருவருக்குள்ளும் ஜாலியான பேச்சு வார்த்தை நடக்கிறது.

புரொமோ

இன்றைய எபிசோட் முடிவில் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியாகியுள்ளது. விஜயா நடனப் பள்ளியில் இருந்த ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியாகிறது.

பின் அண்ணாமலை வீட்டிற்கு வந்த கும்பல் யாரடி இங்கு விஜயா என கேட்க, மரியாதை இல்லாமல் பேசுற நான் தான் விஜயா என்கிறார்.

உடனே அந்த பெண் விஜயாவை அடிக்க வர மீனா உடனே தடுக்கிறார்.

Source: https://cineulagam.com/article/siragadikka-aasai-serial-next-week-promo-1752898315

NO COMMENTS

Exit mobile version