Home இலங்கை அரசியல் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்: சுமந்திரன் தரப்புக்கு சிவமோகன் சாட்டையடி

அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்: சுமந்திரன் தரப்புக்கு சிவமோகன் சாட்டையடி

0

தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19
திருடர்களும் விலக வேண்டும் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவிக்கும போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்
தெரிவிக்கையில்,

பாரிய ஆயுதப் போராட்டம்

இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத
நிலையில் விடப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழரசுக் கட்சி தான் ஏனைய கட்சிகளை
உள்வாங்கி ஈழ விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு கட்சி. ஆனால் துரதிஸ்ட
வசமாக அக் கட்சி இக்கட்டில் சிக்கியுள்ளது.

இன்று கட்சியின் பொதுக்குழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையால் இயங்க
முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கட்சியானது அலிபாவாவின் கையிலும், அவருடன்
சேர்ந்த 19 திருடர்களின் கையிலும் மாட்டிக் கொண்டுள்ளது” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version