Home இலங்கை அரசியல் வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

வன்னியில் சங்கு சின்னத்தில் களமிறங்கும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஜனநாயக
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளது.

நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல்
மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது சங்கு சின்னத்தில்
போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில்
இன்று (10) மதியம் வேட்புமனுவினை தாக்கல் செய்தது.

வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் 

வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலாநாதன், சிவசக்தி ஆனந்தன், முன்னாள்
வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், முன்னாள் வடமாகாண அமைச்சர்
கந்தையா சிவனேசன், முன்னாள் பிரதேசசபை தவிசாளர் க.விஜிந்தன், ஜனநாயக போராளிகள்
கட்சியின் பேச்சாளர் க.துளசி, முன்னாள் போராளி யசோதினி,
சமூக செயற்பாட்டாளர்
மூர்த்தி,
வர்த்தகர் அ.றொயன் ஆகியோர் வேட்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் பெருமளவான ஆதரவாளர்கள்
கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/sl-general-election-dtna-filed-nomination-in-vanni-1728550290

NO COMMENTS

Exit mobile version