Home முக்கியச் செய்திகள் முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் புதிய ஜனாதிபதி அநுர!

0

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) முப்படைத் தளபதிகளுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து முப்படைகளின் தளபதிகளை சந்தித்துள்ள புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாப்பது தொடர்பில் அவர்களுடன் விசேட கலந்துரையாடலில் அநுர ஈடுபட்டுள்ளார்.

முப்படைகளின் தளபதி

மேலும், அநுர குமார திஸாநாயக்கவின் பாதுகாப்பிற்காக விசேட கமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அநுர குமார திஸாநாயக்க நேற்றையதினம் (22) தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/sl-new-president-anura-meets-military-chiefs-force-1727074011?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version