இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், 2024 ஆம் ஆண்டு 888.74 மில்லியன் ரூபா பெறுமதியான மசாலா பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இலங்கையிலிருந்து மிளகு, கறுவா என்பன இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் விசனம்
அத்துடன் இந்த பயிர்ச்செய்கைகள் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், உள்நாட்டில், உரிய விலைக்கு இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
