Home இலங்கை அரசியல் ரணிலின் சேவைக்காலம் நீடிக்கப்படுமா…! பந்துல வெளியிட்ட தகவல்

ரணிலின் சேவைக்காலம் நீடிக்கப்படுமா…! பந்துல வெளியிட்ட தகவல்

0

சிறிலங்கா (Sri Lanka) அதிபரின் சேவைக்காலத்தை நீடிப்பது தொடர்பில் அமைச்சரவையில் இதுவரை எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சா் பந்துல குணவா்தன (Bandula Gunawardane) தொிவித்துள்ளாா்.  

கொழும்பில் (Colombo) வைத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே, அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விடயம் தொடா்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசியலமைப்புக்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதிபர் தேர்தலுக்கான நிதி

இதற்கமைய, அதிபர் தேர்தலுக்குத் தேவையான 10 பில்லியன் ரூபாவை இந்த வருட வரவு செலவு திட்டத்தில் நிதியமைச்சர் என்ற நீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒதுக்கியுள்ளார்.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு, முறைப்படி நாடாளுமன்றத் தேர்தல், அதிபர் தேர்தல் மற்றும் ஏனைய மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை தொடச்சியாக நடத்தும்.

அத்துடன், அதிபரின் சேவை நீடிப்பு குறித்து, அமைச்சரவையில் இதுவரை எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version