Home முக்கியச் செய்திகள் நாட்டை விட்டு பறக்கப்போகும் பெரிய தலைகள் : அம்பலப்படுத்திய கம்மன்பில

நாட்டை விட்டு பறக்கப்போகும் பெரிய தலைகள் : அம்பலப்படுத்திய கம்மன்பில

0

கொழும்பு (Colombo) துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை சுங்க சோதனை இல்லாமல் விடுவித்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் குழு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) இன்று (09.06.2025)  காலை முன்னிலையாக வந்த போதே உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்து எனபது அரசியல் பரப்பில் அதிகமாக பேசப்பட்டது.

323 கொள்கலன் விவகாரம் 

குறித்த குற்றச்சாட்டு சரி என்றால் கடந்த கால அரசாங்கத்தை போலவே தற்போதைய அரசாங்கமும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்றது என்று தான் அர்த்தம் பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தது.

கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்தனவா அல்லது அதற்கு இருந்தவை எவை என்பது பற்றி அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என மகிந்த தரப்பிலிருந்தும் அதிகமான அழுத்தங்கள் அரசுக்கு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், 323 கொள்கலன் விடுவிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

குறித்த அதிகாரிகள் பெல்ஜியம் (Belgium) மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பயணத் தடையைப் பெற குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version