Home இலங்கை பொருளாதாரம் கடன் மறுசீரமைப்பு: மத்திய வங்கி வெளியிட்ட புதிய தகவல்

கடன் மறுசீரமைப்பு: மத்திய வங்கி வெளியிட்ட புதிய தகவல்

0

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் படி, 08 திறைசேரி பத்திரங்கள் சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இடைநிறுத்தத்தை மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அன்றைய தினம் தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பையும் மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பின் படி, இலங்கை மத்திய வங்கி 08 திறைசேரி பத்திரங்கள் உள்ளூர் பத்திர விருப்பத்தின் கீழ் சர்வதேச இறையாண்மை பத்திரங்களுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கிறது.

முதிர்ச்சி காலம்

இலங்கை ரூபாயில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 08 புதிய திறைசேரிப் பத்திரங்களில் 07 வெளியீட்டுத் திகதி செப்டம்பர் 15, 2024 மற்றும் ஒரு பத்திரத்தின் வெளியீட்டு திகதி 2024 மார்ச் 15 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவை 2036 முதல் 2043 வரை முதிர்ச்சியடைவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அனைத்துப் பத்திரங்களுக்கும் 19,466.1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/special-announcement-central-bank-of-sri-lanka-1734722163

NO COMMENTS

Exit mobile version