சிறீலங்கன் விமான சேவை நிறுவனம் பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் சமீபத்திய விமான பயண நிலவரத்தை சரிபார்த்துக் கொள்ளுமாறு சிறீலங்கன் விமான சேவை அறிவுறுத்தியுள்ளது.
இல்லையெனில், 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அல்லது +94 117 77 1979 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறுமாறும் விமான சேவை அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை
நாட்டைப் பாதித்துள்ள சீரற்ற வானிலையை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த 6 விமானங்கள் மத்தள, இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
