Home இலங்கை கல்வி க.பொ.த உயர்தரப் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு

0

2024ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை 2024-2025 ஆம் கல்வியாண்டுக்காக தேசிய பல்கலைக்கழங்களில் உள்வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 2025ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் விண்ணப்பத்தை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

விண்ணப்பதாரர்கள் www.ugc.ac.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

you may like this

https://www.youtube.com/embed/6wCH_dVeW-c

NO COMMENTS

Exit mobile version