தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை (07) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையொன்றை வெளியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள சில அரச ஊழியர்களுக்கு நாளைய தினம் (07) கடமை விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினால் அனைத்து அரச நிறுவனங்களதும் நியதிச்சட்ட சபைகளதும் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
