Home இலங்கை அரசியல் பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் விசேட சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

பொதுத் தேர்தல் தொடர்பில் சகல மாவட்ட அலுவலகங்களிலும் உள்ள தேர்தல் உதவி ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் மற்றும் சகல தெரிவத்தாட்சி அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனிக்கிழமை (28) தேர்தல் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல்

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கிடைத்த அனுபவம், பிரச்சினைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவும் அடுத்த பொதுத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்வதற்கான ஒழுங்கு விதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் குறித்து அன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தவும் எதிர்பார்த்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செப்டம்பர் 30ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version