Home இலங்கை சமூகம் சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வுகளை ஏற்பட்டுத்தியுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி

சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வுகளை ஏற்பட்டுத்தியுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி

0

புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய
அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர்
சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

புதிய ஜனாதிபதி

“நாம்  புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம். எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்களில் தொண்ணூறு வீதமானவர்கள்
இருக்கின்றார்கள்.

வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய
மார்க்சிச நிலைப்பாட்டில் பாடிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர்.

தற்போது
அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய கட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய
தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக
வந்திருந்தார்கள்.

ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல
செயல்படுத்த வேண்டும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version