முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இளைஞர் சமூகம் தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.
குறித்த அறிக்கை இன்றையதினம்(10.08.2025) வெளியிடப்பட உள்ளது.
இளைஞர் சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சூழ்நிலைகள் குறித்து இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட உள்ளது.
முன்னோடி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய இளைஞர் சேவை மன்றத்தை நிறுவிய முன்னோடியாக உள்ளார்.
இந்நிலையில், குறித்த அறிக்கையில், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இளைஞர் கழகங்களின் செயற்பாடுகள் தனது பதவிக் காலத்தில் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்க உள்ளார்.
