Home முக்கியச் செய்திகள் மாத்தறையில் பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு

மாத்தறையில் பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு

0

மாத்தறை (Matara) மாவட்டத்தின் தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் சில வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக இன்றையதினம் (24.10.2024) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை

இதன்படி நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கருத்திற் கொண்டு 10 வகுப்புகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் தரம் 06 மற்றும் தரம் 08 ஆகிய வகுப்புகள் இயங்கும் இரண்டு மாடிக் கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள மண்மேடு சற்று சரிந்துள்ளது.

இந்த நிலையில் இது பாரிய மண்சரிவாக ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version