இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வார இறுதி விடுமுறை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இந்த விசேட சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
விசேட சேவை
இதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நேர அட்டவணையின்றி மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.